search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் தின விழா"

    • மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி மார்ச் 8-ம் தேதி பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற உள்ளது.
    • பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலரும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

    கோயம்புத்தூர்:

    குடும்ப ஆரோக்கியத்துடன் சேர்த்து வீட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி மார்ச் 8-ம் தேதி பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனை மகளிர்களுக்கு விருது வழங்கும் விழாவும் மேலும் இல்லத்தரசிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் சிறப்பு கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.

    குறிப்பாக, மாடித்தோட்ட பயிற்சியாளரும் தமிழ்நாடு பாரம்பரிய விதை சேகரிப்பு குழுவைச் சார்ந்தவருமான திருமதி. பிரியா ராஜ்நாராயணன், சிறுதானிய சமையல் மற்றும் சிறுதானிய உணவுப் பொருட்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திருமதி. மண்வாசனை மேனகா மற்றும் தேனீ வளர்ப்பில் பல்வேறு சாதனைகள் புரிந்து இந்திய மற்றும் தமிழக அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள திருமதி. ஜோஸ்பின் மேரி அவர்களும் நாட்டு மாடுகளை பேணிக் காத்து அதிலிருந்து நிலையான வருமானம் பெற முடியும் என்று சாதித்துக் காட்டிய முனைவர் திருமதி யமுனாதேவி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

    இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக வீட்டின் காய்கறி தேவையை வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம் எனும் தலைப்பிலும், சிறுதானியங்களை உண்டால் சிறுவர் போல் சுறுசுறுப்புடன் வாழலாம், ஆயுளைக் கூட்ட ஆளுக்கு ஒரு தேன் பெட்டி என்ற தலைப்பிலும் மற்றும் நலம் தரும் நாட்டு மாடுகளும் 20 வீட்டு உபயோகப் பொருட்களும் எனும் தலைப்புகளிலும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மேலும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது.

    பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 9442590077, 83000 93777 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மகளிர் தினவிழாவையொட்டி மானாமதுரை ரெயில் நிலையத்தில் பெண்களிடம் புதிய செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    மானாமதுரை:

    மானாமதுரை ரெயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பிற்காக காவலன் எஸ்.ஓ.எஸ். என்ற செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மகளிர் தினத்தையொட்டி நடந்த முகாமிற்கு ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் நாச்சி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறும் போது, ஸ்மார்ட் போனில் பெண்கள் காவலன் எஸ்.ஓ.எஸ். என்ற புதிய செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    ரெயிலில் பயணம் செய்யும் போதும், ரெயில் நிலையத்தில் நிற்கும் போதும் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள், இடையூறு குறித்து பதிவு செய்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும், இந்த செயலி மூலம் வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம், எனவே பெண்கள் பயமின்றி ரெயிலில் பயணம் செய்யலாம் என்றார்.

    காரைக்குடி அருகே உள்ள பாரத் சி.பி.எஸ்.சி. பள்ளியில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் காளிச்சரண் தலைமை தாங்கி பேசினார். அதில் பெண்கள் எதிர்காலத்தில் தேச தலைவர்களாகவும் எல்லா துறைகளிலும் சாதிக்க வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் உலக மகளிர் தின விழா குறித்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பின்னர் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அனில்குமார், பாலா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இளையான்குடி டாக்டர் சாகீர்உசேன் கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஜீபா வரவேற்றார். கல்லூரி செயலர் ஜபருல்லாகான், தமிழ்துறைத்தலைவர் இபுராஹிம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் அனிஷ்பர்வீன் அறிமுக உரை நிகழ்த்தினார். இதில் சிறப்பு விருந்தினராக அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் சுப்புராஜ் மில்ஸ் நிர்வாக இயக்குனர் உமாதேவி மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    பின்பு நெருப்பில்லா சமையல் எனும் தலைப்பில் மாணவிகள் தயாரித்த ஆரோக்கிய உணவுகளை தேர்வு செய்தார். மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரி ஆட்சி மன்றக்குழு பொருளாளர் அப்துல்அஹத், உறுப்பினர்கள் ஜப்பார்அலி, அபுபக்கர்சித்திக், பள்ளி துணை முதல்வர் ஜஹாங்கீர் சுயநிதிபாடப்பிரிவு இயக்குனர் பினுல்லாகான் உள்பட அலுவலர்கள் விழாவில் கலந்துகொண்டனர். தாவரவியல் துறைத்தலைவர் அஸ்மத்து பாத்திமா தலைமையில் பெண் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் பொருளியல் உதவிப்பேராசிரியர் நர்கிஸ்பேகம் நன்றி கூறினார்.
    ×